கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 18 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 2,38,018 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 310 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,86,761 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ மூன்று லட்சத்தை நெருங்கி … Read more

12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

Childrens Having An Age Of 12 14 Get Vaccination From March 2022

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி பணி நடைபெற்று வரும் இந்த வேளையில், 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தேசிய தடுப்பூசி கொள்கையின் ஆலோசகர் டாக்டர் என். அரோரா தெரிவித்து இருக்கிறார். “ தேசத்தில் ஏற்கனவே 157 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு … Read more

உக்ரைன் எல்லையில் நவீன ஆயுதங்களுடன் குவியும் லட்சக்கணக்கான ரஷ்ய படைகள்!

Millions of Russian Forces Flocking To Ukraine Border With Modern Weapons

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்நுழையப் பார்ப்பதாலேனோ ரஷ்யா முன்னெச்சரிக்கையாக உக்ரைன் எல்லையில் தனது படையை குவித்து வருகிறது. முன்னொரு காலத்தில் சோவியத் யூனியனுடன் சேர்ந்து இருந்த ரஷ்யா-உக்ரைன் நாடுகள், பின்னர் தனித்தனி நாடாக பிரிந்தன. தற்போது நிலவும் சூழலில் உக்ரைன் அரசு, அமெரிக்க அரசுடன் கூட்டு வைக்க முயல்வதால், ரஷ்யா எச்சரித்து தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியனில் இணைய முயற்சிக்கும் உக்ரைன், இன்னொரு பக்கம் ரஷ்யா, … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 4,86,451 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரானின் … Read more

உலகளாவிய அளவில் 55 லட்சம் உயிர்கள் கொரோனாவுக்கு பலி!

Corona Virus Death Toll Rose To 55 Laksh

உலக அளவில் கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. கொரோனா என்னும் பெருந்தொற்று இரண்டு வருடங்களைக் கடந்து இன்னமும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் இந்த கொரோனா தொற்றுக்கு 55 லட்சம் உயிர்கள் பலி ஆகி இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உலகளவில் கொரோனா சமூகப்பரவல் ஆகி இருப்பது உறுதியாகி இருக்கிறது. “ தொடர்ந்து உருமாறிக் கொண்டு … Read more

சென்னையில் நிலநடுக்கம் | பல்வேறு உள்நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்!

Earth Quake In Chennai 16 01 2022

சென்னையில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வருகிறது. சூழலியல் மாற்றங்களால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. காலநிலை மாற்றங்களும் பேரிடர்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பலரும் சமூக வலை தளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். “ சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், சூழலியல் மாற்றங்களாலும், பல்வேறு பேரிடர்களை உலகம் சந்தித்து வருகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகம் மனிதர்களாலே அழிகிறது “

ஒரு வருடத்தில் 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து இந்தியா உலகளவில் சாதனை!

Vaccination In India Reached 156 Crores 16 01 2022

ஒரு வருடத்தில் கிட்ட தட்ட 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து சாதனை புரிந்து இருக்கிறது இந்தியா. நேற்றைய தினத்தில் 66 லட்சம் பேர் தேசம் முழுக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 1,56,76,15,454 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மிகக்குறைந்த காலக்கட்டத்தில் அதிக தடுப்பூசிகளை உபயோகித்திருக்கும் நாடாக இந்தியா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. “ உலகளவில் வெகுவிரைவில் சிறார்களுக்கும் தடுப்பூசிகளை அமல்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியும் வரும் நாடாக … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.71 லட்சமானது தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 16 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.71 லட்சமாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,71,202 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 314 பேர் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,86,066 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரான் தொற்றுகளால் பெரிதளவில் பாதிப்புகள் இல்லை என்பதால், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Final | ‘வின்னர் ஆகிறார் ராஜூ, ரன்னர் ஆகிறார் பிரியங்கா’

Raju Jaya Mohan Is The Winner Of Bigg Boss Season 5 Tamil

பிக்பாஸ் 5 தமிழின் இறுதிப்போட்டியின் முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கும் நிலையில் ராஜூ வின்னர் ஆகிறார் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது. பிக்பாஸ் 5 தமிழ் கிட்ட தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட ராஜூ வின்னர் ஆகிறார் என்றும் பிரியங்கா ரன்னர் ஆகிறார் என்றும், அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்திருக்கிறது. பாவ்னி மூன்றாவது இடத்தை பெறுகிறார் என்பதும் கூடுதல் தகவல். “ ஒரு வழியாக 100 நாட்களுக்கும் மேலாக பல சுவாரஸ்யங்களை … Read more

டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகினார் விராட் கோலி!

Virat Kohli Stepped Down As Test Captain Of Indian Team

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. திடீரென்று அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ இதன் மூலம் அனைத்து … Read more