பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் GSLV F10 நாளை விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ

பேரிடர் எச்சரிக்கை,கனிமவியல்,வனவியல் குறித்த கண்காணிப்பிற்கான அது நவீன செயற்கை கோள் GSLV F10 மூலம் நாளை அதிகாலை 5:43-ற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கொரோனோ சூழலில் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்கு இடையூறுகள் இருந்த நிலையில் எல்லா செயல்நிலைகளும் தாமதமாகி வந்தன. தற்போது சூழல் தகுந்தவாறு அமைந்தததால் இந்த வருடத்தின் இரண்டாவது GSLV வகை ராக்கெட் ஆனது EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கை … Read more

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 447 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,309- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளன. இது வரை மொத்தமாய் 48 கோடிக்கும் மேல் மாதிரிகள் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைய ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 17,06,598 பேர் கொரோனோ … Read more

கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது முதல் தவணையில் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையில் மற்றுமொரு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒரு பிரிவினர் முதல் தவணையாக கோவாக்சினும் தவறுதலாக இரண்டாவது தவணையில் கோவிஷீல்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய ஆய்விலேயே இத்தகைய ஆச்சர்யமான முடிவு … Read more

இந்தியாவில் வருகிறதா ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்?

சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கும் பொருட்டும்  இந்திய ரயில்வேயில் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க இருப்பதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி வெகு விரைவில் கோரப்படும் எனவும் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் போக்குவரத்தாகவே இருக்கிறது. இதில் பெரும்பாலான ரயில்கள் டீசல் லோகோமோட்டிவ் ஆகவே இருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு இவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பது மிக மிக அதிகம். … Read more

50 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – மத்திய அரசு

இந்தியாவில் நேற்றைய தினம் வரை ஐம்பது கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 38.9 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 11.1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திகொண்டுள்ளனர். மத்தியபிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மஹாராஸ்டிரம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 99.4 … Read more

குழந்தை தொழிலாளர்களை அதிகரித்திருக்கிறதா இந்த கொரோனோ காலம்…?

இரண்டு வருட இந்த கொரோனோ காலத்தில் இந்த உலகில் தான் எத்தனை மாற்றம்..! அந்த மாற்றங்களுள் நிகழ்ந்தவை தான் இந்த விரும்ப தகாத மாற்றமும்..! புள்ளி விவரங்கள் இல்லை, ஆனால் கண்களால் விவரமாய் பார்க்க முடிகிறது.  ஆம் இந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை. வெளியில் வேலை இல்லை, வீட்டில் வருமானம் இல்லை, தகுந்த தொழில் இல்லை ஆனால் இருப்பதெல்லாம் பண தேவையும் கஸ்டமும். நடுத்தர மனிதன் என்ன தான் செய்வான்?, பள்ளிகள் இல்லாததை … Read more

இயற்கையை மீட்டு தந்திருக்கிறதோ இந்த கொரோனோ காலம்…?

கொரோனோ என்னும் நுண்ணுயிரி மனித உயிர்களை இன்றளவும் வதைத்து வரும் நிலையில் அது உலகின் இயற்கையை மீட்டு தந்திருக்கிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா…? ஆம் உண்மையே..! காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது. நீரின் தரம் உயர்ந்திருக்கிறது. உலக வெப்பமயமாதல் குறைந்திருக்கிறது. இந்த கொரோனோ இயற்கைக்கு மட்டும் வரம் போல…! உலகமே கொரோனோ என்னும் கொடூர கிருமியிடம் சிக்கி ஊரடங்கு என்னும் நிலையில் வீட்டிற்குள்ளேயே அடங்கி கிடக்கையில் சத்தமின்றி அரங்கேறி இருக்கிறது இந்த இயற்கை மாறுதல்கள். தொழிற்சாலைகள் இயங்கவில்லை, … Read more

அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் போராடி தோல்வியுற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்போடு விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. ஆதலால் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. தங்க பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதிக்கொள்கின்றன. ” தங்கமோ,வெள்ளியோ,வெண்கலமோ பதக்கத்தை தாண்டி இந்த அணி … Read more

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, 433ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது, அதே சமயம் 14 ஆண்டுகள் தண்டனை முழுமை பெறாத கைதிகளை கருணையின் … Read more