சுட்டெரிக்கும் வெயில் ஜூன் வரை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

Intensive Heat Waves Continue Untill June 2024 Idamporul

சுட்டெரிக்கும் வெயில் ஆனது வருகின்ற ஜூன் மாதம் வரை நிச்சயம் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. ஏற்கனவே தமிழகமெங்கும் அனலாக வெயில் அடித்துக் கொளுத்திக் கொண்டு இருக்கும் வேளையில், இந்த சுட்டெரிக்கும் வெயில் ஜூன் மாதம் வரை நீடிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. இன்றிலிருந்து 6 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வெப்ப அலை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வும் மையம் கூறி … Read more

புதிய கல்வி கொள்ளையை எதிர்க்கும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை ஆதரிப்பது ஏன்?

TN Agrees To Implement PM SHRI Schools Under NEP Scheme Fact Here Idamporul

புதிய கல்வி கொள்கையை நான்கு வருடங்களாக கடுமையாக எதிர்த்து வந்த ஆளும் தமிழக அரசு, புதிய கல்வி கொள்கையின் கீழ் வரும் PM SHRI பள்ளிகளை திடீர் என ஆதரிப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலாவதாக புதிய கல்வி கொள்கை (NEP 2020) என்பது என்ன? புதிய கல்வி கொள்கை என்பது தேசத்தின் கல்வி தரத்தை உலகளாவிய அளவில் மேம்படுத்த ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் ஆகும். திட்டத்தின் நோக்கம் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

Drug, pill, syringes and heroin on wooden table, drug abuses

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் வெகுவாக அதிகரித்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் இளைஞர்கள் என்பதால் ஒரு பெற்றோராக தங்கள் குழந்தைகளை போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். கள்ளு, கள்ளச்சாராயம், மது எனப்படி படியாக முன்னேறி தற்போது கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் என வந்து நிற்கிறது. மதுவை விட மிக மிக கொடியவையாக கருதப்படுகிறது இந்த போதைப் பொருள்கள். சில வருடங்களாகவே … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

There Is No Permission For Reopening Sterlite Copper Industries Says Supreme Court Idamporul

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லாம் அனுமதி வழங்க முடியாது என கூறி ஸ்டெர்லைட் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இருக்கிறது உச்சநீதிமன்றம். ” ஸ்டெர்லைட் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசும் … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

Santhan Freed In Rajiv Gandhi Case Died In Hospital Idamporul

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் (55) உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். “ தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துணிந்த சாந்தனை மரணம் கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது “

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை!

After Pudhuchery Tamilnadu Ban Color Panju Mittai Fact Here Idamporul

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து உத்தரவு இட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்புதுறை. சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட கலர் பஞ்சு மிட்டாய்களிலும் புற்றுநோயை உண்டாக்க கூடிய Rhodaminbe – B நிறமி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்பு துறை. “ குழந்தைகள் அதிகம் உண்ணும் கலர் பஞ்சு மிட்டாயில் புற்று நோயை … Read more

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா?

Will TNPSC Exam Disrupted By Parliament Elections Fact Here Idamporul

தேர்வர்கள் பலரும், நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், TNPSC தரப்பு அதற்கு பதில் அளித்து இருக்கிறது. TNPSC ஒரு தனித்துவ அமைப்பு, நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளுக்கோ, தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளுக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, தேர்வுகளும், தேர்வுகளை சார்ந்த பணிகளும் அதுபாட்டிற்கு நடக்கும் என TNPSC உறுப்பினர் ஆரோக்யராஜ் கூறி இருக்கிறார். “ தேர்வர்கள் தேர்தல், தங்களுடைய முய்றசிகளுக்கு பாதிப்பை … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏன் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது?

Why So Much Of Problems Around Kilambakkam Bus Terminus Fact Here Idamporul

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்ந்து தென் தமிழகம் செல்லும் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைப்பிற்கான முழுமுதல் காரணம், மாநகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க தான். அரசின் நோக்கமோ காரணமோ சரி தான் என்றாலும் கூட, முழுமையான திட்டமிடல் என்பது இங்கு தவறாகிப் போகி இருக்கிறது. பொதுவாக விழாக்காலங்களில் சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு பயணிப்பவர்கள் மட்டும் இலட்சங்களை தாண்டும். சரி இலட்சம் பேர் … Read more

கணவன் மீது போலி பாலியல் வழக்கு, மனைவிக்கு 5 ஆண்டு சிறை!

Foisting Case Against Husband Wife Jailed For 5 Years Idamporul

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கணவன் மீது போலி பாலியல் வழக்கு தொடுத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை. கடந்த 2019 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. அதாவது தனது 14 வயது மகளை தனது கணவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மனைவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். மனைவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கணவர் மனைவி இருவருக்கும் … Read more

மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை, ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Free Bus Services Must Provide To Men Also Says Anbumani Idamporul

மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார். சென்னையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு காற்று மாசுபாடு மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் கிட்ட தட்ட நான்காயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காற்று மாசுபாடுக்கு பெரும் பங்கு வகிப்பது கார்களும், பைக்குகளும் வெளியேற்றும் கார்பன் மோனாக்ஸைடுகள் தான். வேலை நிமித்தம் என்று கார், பைக்குகளை அதிகம் பயன்படுத்துவது ஆடவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இலவச … Read more