ஏழு வருடத்திற்கு பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரருக்கு கிடைத்திருக்கும் சதம்

இந்தியா – இங்கிலாந்திற்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார் இந்திய வீரர் கே எல் ராகுல். இது லார்ட்ஸ் மைதானத்தில் ஏழு வருடங்களுக்கு பிறருக்கு ஒரு இந்திய வீரருக்கு கிடைக்கும் சதம் ஆகும். பொதுவாகவே லார்ட்ஸ் மைதானம் என்பது ‘Mecca Of Cricket’ என்று எல்லோரோலும் அறியப்படும். அங்கு சதம் அடித்தால் ஒரு மிகப்பெரும் பெருமையாகவே கொள்ளப்படும். கடைசியாக இந்திய வீரர் அஜிங்கிய ரஹானே 2014-இல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் – உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் ராஷித் கான்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் அரசிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில் அங்கு அமைதி சீர்குலைந்து பொது மக்கள் கொல்லப்படும் நிலையும் நிலவி வருகிறது. இதனைக்குறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ராஷித்கான் தனது ட்விட்டரில் “ உலக தலைவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும் இங்கு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு நிலம் பறிக்கப்படு உடைமைகள் பறிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் “ என்று கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர் புரிந்து … Read more

அடுத்த கட்டமாக உலக சாம்பியன்ஷிப் வெல்வதே இலக்கு – நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ராவிற்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நீராஜ் சோப்ரா தன்னுடைய அடுத்த கட்ட இலக்கு என்பது உலக சாம்பியன்சிப் வெல்வதே என்றும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதிருந்தே தொடங்க இருப்பதாகவும் தன் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா தற்போது நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தனது … Read more

ஏழு பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்கிறது இந்தியா!

ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை நிறைவு செய்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாய் ஆறு பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் இந்த ஒலிம்பிக்கில் அதை பின்னுக்கு தள்ளி ஏழு பதக்கங்களை பெற்றிருக்கிறது இந்தியா. இந்தியா பெற்ற ஏழு பதக்கங்கள் 1) மீரா பாய் சானு – சில்வர் (49 கிலோ பிரிவு பளுதூக்குதல்) 2) ஆடவர் ஹாக்கி அணி – வெண்கலம் 3) … Read more

ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.தனது இரண்டாவது எறிதலில் அவர் எறிந்த 87.58 மீட்டர் தூரம் அவருக்கு உலக அரங்கில் தங்கத்தை பெற்று தந்திருக்கிறது. ஏற்கனவே இதற்கு முந்தைய தகுதிச்சுற்றில் தனது முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீராஜ் சோப்ரா. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் எப்படியேனும் வெல்வார் என்று … Read more

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்று இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்தார். 65 கிலோ எடைபிரிவு, வெண்கல பதகத்திற்கான போட்டி, இந்தியாவின் பஜ்ரங் புனியாவிற்கும் கஜகஸ்தானின் தவுலத்திற்ற்கும் இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே புயல் போல களத்தில் நின்ற பஜ்ரங் புனியா எதிராளிக்கு ஒரு புள்ளி கூட … Read more

கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 கோல்ப் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்று நேற்று வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில் நூலிலையில் தகர்ந்தது அந்த நம்பிக்கை. தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை, ஆட்டத்தின் நிலையையே மாற்றியதால் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார் அதிதீ அசோக். கோல்ப் மகளிர் ஆட்டத்தில் நேற்றைய தினம் வரை இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கை கொடுத்து வந்த அதிதீ அசோக் … Read more

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ்விடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லையெனினும் இதற்கு பின் அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ், 12-5 என்ற கணக்கில் எளிதாக பஜ்ரங் புனியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தங்கம் வெல்வால் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா அரையிறுதியில் … Read more

கோல்ப் விளையாட்டில் பதக்கம் பெறுகிறதா இந்தியா? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் கோல்ப் ஆட்டத்தில், நடந்து முடிந்த மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தை பிடித்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் நிற்கிறார் இந்திய கோல்ப் வீரர் அதிதீ அசோக். மகளிர் கோல்ப் பிரிவில் மூன்று சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் நெல்லி கொர்டாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் அதிதீ அசோக் தொடர்ந்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார். தொடர்ந்த வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைபடுகிறது. இறுதிச்சுற்றிலும் மோசமான வானிலை  தொடருமானால் இந்தியாவிற்கு மற்றுமொரு … Read more

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் மோர்டஸா கியாஷியை 2-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா , ஈரானின் மோர்டஸாவை எதிர்கொண்டார். முதலில் மோர்டஸாவே முன்னிலை வகித்த நிலையில் அதற்கு பின் சுதாரித்து அதிரடியாக விளையாடிய பஜ்ரங் புனியா, 2-1 என்ற கணக்கில் மோர்டஸாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்றே நடைபெறும் அந்த அரையிறுதி … Read more